இலங்கைக்குள் மேலும் மூன்று கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்வதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 84 வயது பெண்ணொருவரும் 70 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.