கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
இதனால் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் என 8 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தும் .ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆளுகைக்குட்பட்ட நெடுந்தீவுப்பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை நடுநிலை வகித்ததன் மூலம் ஆதரித்தும் வெற்றி பெறச் செய்துள்ளது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது