கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று (21.11.2020) 1000 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மாளிகாவத்த விளையாட்டரங்கிற்கு அருகில் 150 பேரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதர, மட்டக்குளிய பகுதிகளில் 200 பேரும், ஜிந்துப்பிட்டிய பகுதிகளில் 300 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.