மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு ர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று காலை குறித்த வழக்கு விசாரணைகளுக்காக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்துள்ளார்.
எனினும் குறித்த தடை உத்தரவை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பித்திருந்தார்.