கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செலுத்த முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது- அநுரகுமார திஸாநாயக்க

anura 2
anura 2

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் பிரேதப்பெட்டிகளுக்கான செலவைக்கூட செலுத்த முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரேதப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிரதேப் பெட்டிகளுக்கான செலவைக்கூட செலுத்த முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது.

கொரோனா சுகாதார நல சமூகப் பாதுகாப்பு நிதியத்தை உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்காகப் பயன்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொரோனா வைரஸால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து பிரேதப் பெட்டிகளுக்கான பணத்தை அறவிடுவது எந்த வகையில் நியாயமானது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.