மாவீரர் நாளான இன்று(27) முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
நகர்புறங்களில் உள்ள சந்திகள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவான இராணுவத்தினர் மற்றும்காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் உந்துருளி சுற்றுக்காவல் நடவடிக்கையும் வீதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கக்கூடிய வகையில் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிர படுத்த பட்டுள்ளது.