இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்தும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நால்வர் கைது!

social media
social media

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் காவல்துறையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.