தடை உத்தரவை மீறி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய யாழ் மாநகர சபை உறுப்பினர்!

VideoCapture 20201127 181158
VideoCapture 20201127 181158

தடை உத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வு யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் இல்லத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

மாலை 6.00 மணிக்கு உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலியும் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள்,ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை பொதுமக்கள் நிகழ்த்த முடியாதவாறு நீதிமன்றங்களில் தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே யாழ்ப்பாண வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் தனது இல்லத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.