கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது!

corona germ
corona germ

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு , மரணங்களின் எண்ணிக்கையும் 107 ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளரின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதே வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி நாட்டில் கொரோனா பரவலில் இரண்டாம் அலை உருவானதன் பின்னர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று காலை வரை கொழும்பில் மாத்திரம் 8575 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,500 ஆகும். இவர்களில் 16 226 பேர் குணமடைந்துள்ளதோடு 6175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வெளியிடப்பட்ட கொரோனா மரணங்களுக்கு அமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.