இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுத தீர்மானம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 56
625.500.560.350.160.300.053.800.900.160.90 56

கார்த்திகை தீபத்திருநாளில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுவதாக இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெற்றது குறித்த கூட்டத்தின்போது நேற்று முன் தினம் கார்த்திகை விளக்கீடு தினத்தன்று வடக்கு மாகாணத்தில் தீபம் ஏற்ற முற்பட்ட பொதுமக்கள் மீது அடாவடியில் ஈடுபட்ட இராணுவத்தினர் செயற்பாட்டினை கண்டித்து அரசாங்கத்திற்கு நாளைய தினம் கடிதம் அனுப்ப உள்ளதாகவும் மேலும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் மிக விரைவில் கூடி அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

​​மேலும் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.