நான்காயிரம் பேர் பாதுகாப்பு நிலையங்களில் – சமல் ராஜபக்ஷ

download 1 2
download 1 2

புரேவி சூறாவளியால் வடக்கில் இடம்பெயர்ந்த 1009 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 7 பேர் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 15 வீடுகள் முழுமையாகவும், 170 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என நீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று இரவு கரையைக் கடந்த புரவி சூறாவளி தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நேற்றிரவு சூறாவளி இலங்கையின் வடமேற்கு கரையின் ஊடாக திரியாய் – கச்சவேலி ஊடாக நாட்டின் நிலப்பரப்புக்குள் புகுந்ததுள்ள நிலையில் இது இன்று மன்னார் ஊடாகப் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சூறாவளி தாக்கத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 628 குடும்பங்களைச் சேர்ந்த 1949 பேரும், மன்னார் மாவட்டத்தில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1114 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேரும் 65 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.