கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள அம்மா உணவகம் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உணவகத்திற்க்கு மதுபோதையில் வந்த சிலர் குறித்த உணவத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அங்கிருந்த கண்ணாடிக் கதவுகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
அத்துடன் உணவு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சோக்கேஸ் என்பன அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பணியாளர்களை தாக்க முயற்ச்சித்ததாகவும் அறிய முடிகின்றது.
எனினும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.