முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது

022
022

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.