ஐ.தே.க தலைமையிலிருந்து ரணில் விலகுகிறார்?

ranil1
ranil1

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் கட்சியின் தலைமை தொடர்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கட்சியினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றக்கூடிய ஒரு தலைவரிடம் கட்சியை ஒப்படைக்க ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதுடன், அத்தகைய தலைவரை சந்தித்தாலும் இல்லாவிட்டாலும், தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து தோல்விகளுக்கும் காரணம் விரைவாக செயற்படுவது. அரசியலில் பொறுமையாக செயற்படவேண்டும் என்பதோடு இளம் அரசியல்வாதிகளுக்கு இது மிக முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளார்.