தோல்வியை எண்ணி துவண்டுவிடாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று (Nov.22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
வெற்றியும் தோல்வியும் இரு பிரதான கட்சிகளுக்கும் பொதுவானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.