புதிய கல்வியாண்டினை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு- ஜி எல் பீரிஸ்

G.L.Peiris 720x450 1

புதிய கல்வியாண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்தவாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார தரப்பினரின் பரிந்துரைகள் அறிவுறுத்தல்களிற்கு அமைய இது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தவணை விடுமுறை 24 ம் திகதி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.