மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்
- டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்
• வெல்லம்பிட்டிய காவற்துறை பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெள்ளவத்தை காவற்துறை பிரிவில் கோகிலா வீதி
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்
• மோதர (முகத்துவாரம் காவற்துறை பிரிவு)
• கொட்டாஞ்சேனை காவற்துறை பிரிவு
• கிராண்ட்பாஸ் காவற்துறை பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு காவற்துறை பிரிவு
• டேம் வீதி காவற்துறை பிரிவு
• வாழைத்தோட்டம் காவற்துறை பிரிவு
• மாளிகாவத்த காவற்துறை பிரிவு
• தெமட்டகொடை காவற்துறை பிரிவு
• மருதானை காவற்துறை பிரிவு
• கொம்பனித்தெரு காவற்துறை பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரள்ளை காவற்துறை பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெல்லம்பிட்டிய காவற்துறை பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு
• மட்டக்குளி காவற்துறை பிரிவில் பர்கசன் வீதி தெற்கு (( South of Ferguson Road)
• கொம்பனித்தெரு காவற்துறை பிரிவில் ஹூணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) காவற்துறை பிரிவில் 60ஆவது தோட்டம்
• வெள்ளவத்தை காவற்துறை பிரிவில் மயுரா பிளேஸ்
• வெள்ளவத்தை காவற்துறை பிரிவில் நசீர்வத்தை
• மீரிஹான காவற்துறை பிரிவில் தெமல வத்தை (தமிழ் பிரிவு தோட்டம்)
கம்பஹா மாவட்டம்
- நாளைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்
வத்தளை காவற்துறை பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நைதூவ பிரதேசம்
பேலியகொட காவற்துறை பிரிவு
• கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிபத்கொடை காவற்துறைபிரிவு
• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்
வத்தளை காவற்துறை பிரிவில்
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்
பேலியகொட காவற்துறை பிரிவு
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவ
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை
கிரிபத்கொடை காவற்துறை பிரிவில்
• ஹூணுப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் (MC) வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி
நிட்டம்புவ காவற்துறை பிரிவில்
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்
வெயங்கொட காவற்துறை பிரிவு
• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை
பூகொடை காவற்துறை பிரிவு
• குமாரிமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
- இன்றைய தினம் (21) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்படும் பிரதேசம்.
பேலியகொடை காவற்துறை பிரிவு
• பேலியகொடை காஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹாவத்தை மற்றும் புரண கொடுவத்தை ( Pooranakotu Waththa)
கிரிபத்கொடை காவற்துறை பிரிவு
• வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.