ஹட்டன் – ஆரியகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக குடுபஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் ஒருவரைத் தவிர எவரும் இல்லாத நிலையில் பிரதேச மக்கள் தீயில் சிக்குண்டவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 74 வயதுடையவரே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.