நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இராணுவம் ஈடுபடுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபயவின் உத்தரவில் முப்படையினரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தும் அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஜனநாயகம் கேள்விக்குட்படுத்த இடமளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
ஏதேனுமொரு பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பொலிஸாரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, பொலிஸில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.