350 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

IMG 20201227 WA0009
IMG 20201227 WA0009

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீட்டனர்.

எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கஞ்சா போதைப்பொருள் பொதிகள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.