முல்லைத்தீவில் முள்ளியவளை நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதியை சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன இந்நிலையில் குறித்த உடற்பாகங்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைகாவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்
காவல்துறையினர் குறித்த இடத்தில் வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட தோடு குறித்த இடத்தில் சிவிலுடையில் காவல்துறையினர் கடமையில் இருக்கின்றனர்
குறித்த சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடல் பாகங்கள் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர்
இந்நிலையில் உடல் பாகங்களை நீதவான் பார்வையிட்ட பின்னர் அவரின் உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில் குறித்த பகுதிகளில் யாரும் காணாமல் போனதற்கான தகவல்கள் ஏதும் இல்லை என அறியமுடிகிறது. குறித்த பகுதியை சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன இந்நிலையில் குறித்த உடற்பாகங்கள் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றியுள்ளது
குறித்த பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் வருகைதந்து மரம் அறுக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்
குறித்த பகுதியில் பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்ற நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது