முகக்கவசம் அணியவும், பொது இடங்களில் சமூக இடைவெளி பேணவும் தவறியதற்காக கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 2,044 ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணுமாறும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.