அம்பாறை பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!

Capture 2 min e1606668557241 505x306 c
Capture 2 min e1606668557241 505x306 c

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, காணாமல் போயுள்ள நபர் திருகோணமலை சேருவில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும், பொதுச் சுகாதார வெளிக்கள அலுவலர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய குறித்த நபருக்கு 3 வயதுடைய குழந்தை ஒன்று உள்ளதாக காவல்துறையினரால் கணடறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.