தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (05) மட்டக்களப்பு கல்லடியில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் மதகுரு சிவஸ்ரீ .கி.சிவபாலன் குருக்கள் மற்றும் சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் உரைகள் இடம்பெற்றன.