மாற்றங்கள் எதுவுமின்றி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்- எதிர்கட்சி தலைவர்!

பிரேமதாச
பிரேமதாச

மாகாண சபை முறைகளில் மாற்றங்கள் எதுவுமின்றி எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி எதிர்கட்சியின் கொள்கைகளுடன் இணங்குமாயின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படமுடியும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.