ஹட்டன் – லெதண்டி – பெல்மோரா தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் காணப்படும் நிலையில் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.