இந்தியா நோக்கி புறப்பட்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Jaishankar1 571 855
Jaishankar1 571 855

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இந்தியா நோக்கி புறப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்களும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.