போலியான வீசாக்களை பயன்ப்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்ல முற்பட்ட 03 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை செர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.