கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆகக்குறைந்த டெங்கு நோயாளர்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 802 டெங்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 800 ஆக பதிவாகி உள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 247 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் மீள பரவும் அபாயம் உள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.