ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் பயணித்த பேருந்து ஒன்று பொலனறுவை-லங்காபுர பகுதியில் பராக்கிரமபாகு சமுத்திரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 23 பேர் காயமடைந்துள்ளனர் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.