வவுனியாவில் யானைகளின் அட்டகாசம்; மக்கள் கவலை

IMG 20210109 WA0014
IMG 20210109 WA0014

வவுனியா செட்டிகுளம் பகுதியில் விதைத்து ஒன்றரை மாதமான நெல்வயல்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டதாக அக்கிராமத்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்தசம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாயிகள்,

நேற்றிரவு எமது வயல்களுக்குள் உட்புகுந்த சுமார் 40க்கும் அதிகமான யானைக்கூட்டம் விதைத்து ஒன்றரை மாதமான பயிர்களை மிதித்து நாசம் செய்துவிட்டது.

வங்கியில் கடன் பெற்று செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்செய்கையை ஒரே இரவில் வந்து யானைகள் அழித்துச்சென்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுவரையான காலப்பகுதியில் ஒன்று இரண்டு யானைகளே வந்து சென்றிருந்த நிலையில் நேற்றையதினம் வழமைக்கு மாறாக 40ற்கும் மேற்பட்ட யானைகள் வயல்வெளிக்கு வருகைதந்து பயிரை முற்றாக சேதப்பட்டுத்திவிட்டு சென்றுள்ளது.

இந்த யானைபிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வாக ஒரு யானை வேலியை அமைத்து தரும்படியும் இதற்கான நஷ்ட ஈட்டையும் பெற்றுத்தரும்படி தெரிவித்தனர்