நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

rain 768x384 1
rain 768x384 1

இலங்கைக்கு அருகாமையில்  (தென்கிழக்காக) உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும்  இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதற்கமைய, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.