பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு!

parakrama
parakrama

பொலன்னறுவை மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் பலத்த மழைக் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் (10) திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து வான் கதவுகளும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு திறக்கப்படுவது இது முதல் சந்தர்ப்பமாகும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 10 வான் கதவுகளில் எட்டு தலா ஒரு அடிக்கும், இரண்டு தலா இரு அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் விளைவாக வினாடிக்கு 1,620 கன அடி நீர் வெளியேறும்.

இந் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயத்தைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.