முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் என்னிடம் கூறியுள்ளார்-த.சித்தார்த்தன்

VideoCapture 20210110 163120
VideoCapture 20210110 163120

முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை சந்தித்தன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்
நினைவுத் தூபி அகற்றப்பட்ட விடையம் சம்பந்தமாக உண்மையில் தனக்கு மிகப்பெரும் அழுத்தம் இருந்ததாகவும், அதற்கான நிரூபம் தன்னிடம் இருப்பதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.


ஆகவே நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாகவும், அதற்கு எங்களுடைய மற்றவர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும், இது தொடர்பில் மாணவர்களிடமும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவர் மிகவும் தெளிவான நிலையிலேயே இருக்கின்றார். அத்தோடு தான் அதனை தானாக ஆரம்பிப்பதாகவும் கூறியிருந்தார் என தெரிவித்திருந்தார்.