இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

rain30
rain30

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அத்துடன் வளிமண்டலம் முகில் கூட்டங்களுடன் காணப்படும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதோடு, வடக்கு, கிழக்கு வடமத்திய, மற்றும் மத்திய மாகாணங்களில் ஆங்காங்கே 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.