வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் வெல்லவாய, ரந்தெனிய, 16ம் கிராம பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஒரு லட்சத்துக்கு பெறுமதி வாய்ந்த தேக்கு மரக்குற்றிகளோடு சட்ட விரோதமாக பயணம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கடத்தல் தொழிலானது நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு கடத்தப்பட்ட மரக்குற்றிகளோடு சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.