தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கருவலகஸ்வெவ – வனாத்தவில்லு பிரதேச செயலகப் பிாிவுகளில் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீர்ப்பாசனத்துறை திணைக்களம் தொிவித்துள்ளது.
தற்போது வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கலாஓயாவைப் பாவனைக்குட்படுத்துவது ஆபத்தானது என்றும் கலாஓயாவை அண்டிய தாழ்நில பிரதேச வாழ் மக்கள் எச்சாிக்கையுடன் செயற்படுமாறும் அத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.