குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 766 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 232 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.