கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 3
1 3

கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் 62 வறிய மாணவர்களுக்கு 2021 ஆம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடி, டச்பார் கிராமத்தில் கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் இயக்கப்படும் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக நலன்விரும்பிகளின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் நிறுவனரும் இலவச கல்வி நிலையத்தின் ஆசிரியர்களும் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் நிறுவனர் சு.சியாந் தனது உரையில் அனுசரணையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தமது அமைப்புக்கு உதவி வரும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.