ஈ டி ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்!

zasudili 830x495 1
zasudili 830x495 1

ஈ டி ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளது.

ஈ டி ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஈ டி ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.