ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உப தலைவராக ருவான் விஜயவர்தன நியமனம்

Ruwan Wijewardene
Ruwan Wijewardene

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உப தலைவராக ருவான் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான புறக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது

இதன் போது, கட்சியில் தற்போது வெற்றிடமாகவுள்ள பொதுச்செயலாளர் பதவிக்கு பாலித்த ரங்கே பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ருவான் விஜயவர்தன புதிய உப தலைவராகவும் , முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதி தலைவராகவும், ஏ எஸ் எம் மிஷ்பாய் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.