மேலும் 206 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

OIP 6
OIP 6

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 206 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தென் கொரியாவிலிருந்து 95 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 66 பேரும், கட்டாரலிருந்து 45 பேரும் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்தும் செல்லப்பட்டனர்.