கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

kaithu

திருகோணமலை குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

குறித்த நபரை நேற்றிரவு (13) கைது செய்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த நசீர் நஜாத் (வயது 38) என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற போதே காவல்துறையினருக்கு கிடைப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 90 போதை மாத்திரைகள் மற்றும் 2 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.