இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய கையடக்கத்தொலைபேசி விண்ணப்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
‘இலங்கை சுற்றுலா’ என்று அழைக்கப்படும் இந்த அப் ஜனவரி இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விசாக்களைப் பெறும்போது சுற்றுலாப் பயணிகள் இந்த விண்ணப்பத்தின் மூலம் காப்புறுதித் தொகையைப் பெறுவதனை கட்டாயமாக்க அதிகார சபை முடிவு செய்துள்ளது.
காப்புறுதித் திட்டத்திற்கு மேலதிகமாக, இலங்கைக்குச் செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய பி.சி.ஆர் சோதனைக் கட்டணம் மற்றும் சுகாதார விதிமுறைகள் பற்றிய தகவல்களும் இந்த அப்பில் உள்ளடக்கப்படவுள்ளன.