வவுனியா பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களுக்குள் திறக்கப்படும்; அமைச்சர் நா.உ திலீபனிடம் உறுதி!

Thileepan
Thileepan

வவுனியாவில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் காணப்படும் பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் திறக்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினுடாக அமைச்சர் சசீந்திர ராஜபக்சவுடன் இன்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய போதிலும் திறக்கப்படாமல் காணப்படுவதனால் குறித்த கட்டிடம் வீணாகுவது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு வாரங்களில் வவுனியா பொருளாதர மத்திய நிலையத்தினை திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என என்னிடம் உறுதி அளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.