மேலும் 512 பேர் முழுமையாக குணமடைவு!

1 5
1 5

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 512 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44259 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50899 ஆக பதிவாகியுள்ளதோடு, 6389 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.