தனிமைப்படுத்தலிலிருந்து சில பகுதிகள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டது – கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம்

POLICE CURFEW ARMY ROAD BLOCK 768x384 1
POLICE CURFEW ARMY ROAD BLOCK 768x384 1

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதன் படி, எஹெலியகொட, பாணந்துறை, பேருவளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகள் மற்றும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய எஹெலியகொட காவற்துறை பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யக்குதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும். பாணந்துறை காவற்துறை பிரிவிற்குட்பட்ட 675 தொடவத்த கிராம சேவகர் பிரிவும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேருவளை காவற்துறை பிரிவுக்குட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மக்கொன மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.