நெடுந்தூர புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

Sri Lankan train e1423446798459

கொவிட்-19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி பிரதான மார்க்கம், வடக்கு மார்க்கம், மட்டக்களப்பு மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கம் முதலான தொடருந்து மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.