பாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

maithree gota 300x139 1
maithree gota 300x139 1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்து பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஆச்சரிய சம்பவம் மெதிரிகிரியவில் இன்று இடம்பெற்றது.

பொலனறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் ஜனாதிபதியும் கலந்துகொண்டனர்.
பாடசாலையொன்றில் கட்டிடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி திரும்பி இது கட்டப்படுவதற்கு காரணமாகயிருந்தவரே இதனை திறந்துவைக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.


இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கட்டிடத்தை திறந்துவைத்தார்.