சட்டவிரோத பறவைகள் விற்பனை தொடர்பில் மூவர் கைது!

1610856656 6722914 hirunews
1610856656 6722914 hirunews

அக்குறணை பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பறவைகளை விற்கும் வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த அவசர அழைப்பின் படி அக்குறணை பிரதேசத்தில் உள்ள 3 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன் போது 53 கிளிகளும் 5 நெல் குருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இந்த பறவைகளை அனுராதபுர மாவட்டத்தில் தோனிகள எனும் பிரதேசத்தில் ஒரு பறவையை 750 ரூபாவிற்கு வாங்கி 1800 ரூபாக்கு விற்று வந்துள்ளதக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அத்துடன் அக்குறணை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றிய பறவைகளை பொறுப்பேற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.